Chapter 6
1. குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு.
பதில்: புதிய விளக்கம்:
ஒரு நல்ல அமைச்சர் என்பது, ஒரு வேலைக்குத் தேவையான கருவிகள், சரியான நேரம், அந்தச் செயல் எப்படி செய்யவேண்டும் என்ற அறிவு மற்றும் செயலைச் சிறப்பாக முடிக்கும் திறமை ஆகிய அனைத்தையும் நன்கு அறிந்து செயல்படக்கூடியவனாக இருக்க வேண்டும்.
2. குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு.
பதில்: புதிய விளக்கம்:
சிறந்த அமைச்சர், வலிமையான மனதுடன் இருப்பதோடு மட்டுமல்லாமல், குடிகளை பாதுகாப்பதிலும் திறமையுடன் இருக்க வேண்டும். மேலும் ஆட்சி செய்வதற்கான அனுபவம், நூல் அறிவு மற்றும் விடாமுயற்சி ஆகிய ஐந்தும் அவனிடத்தில் இருக்க வேண்டும்.
3. மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
பொருள்: இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது).
பதில்: ஒரு அமைச்சர் இயற்கையாகவே நுண்ணறிவு உடையவராகவும், நூல்களால் அறிவைப் பெற்றவராகவும் இருந்தால், அவரை எதிர்த்து எந்தவொரு சூழ்ச்சியும் நிலைத்திருக்க முடியாது. அவர் அறிவும் அனுபவமும் அந்த சிக்கல்களை சுலபமாக தீர்க்க முடியும்
4. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்.*
பொருள்: ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும், உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
பதில்: நூல்களால் ஒரு செயலின் முறையைப் பூரணமாகக் கற்றிருந்தாலும், வாழ்க்கையின் நடைமுறைகளைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். உண்மையான உலக அனுபவம் இல்லாமல் ஒருவரால் சீரான முடிவுகளை எடுக்க முடியாது. நூல் அறிவுக்கும், நடைமுறை அறிவுக்கும் சமநிலை வேண்டும்.
5. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
பதில்: பொருள்: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.
அணி: சொல் பின்வருநிலை அணி
6. குறள்:
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
பதில்: தோல்வியின்றி, நியாயமான வழியில் சேர்க்கப்படும் செல்வம் என்பது ஒருவருக்கு அறநெறி வாழ்க்கையும், மகிழ்ச்சியும் தரும். தவறில்லாமல் ஈட்டிய பொருள் எப்போதும் நன்மையைத் தரும்.
7. குறள்: அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
பதில்: இரக்கம் மற்றும் அன்பில்லாமல் ஈட்டப்படும் செல்வம் நல்லதல்ல. அத்தகைய பொருளை அறிவுள்ளவர்கள் தவிர்த்தே விட வேண்டும், ஏனெனில் அது நலனல்லாமல் தீமையை ஏற்படுத்தும்.
8. குறள்: குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
பதில்: தனது சொந்த வளங்களை (பொருளை) பயன்படுத்தி யோசித்துச் செயல்படும் மனிதன், மலைமீது நின்று யானைப் போரை நிதானமாகக் கவனிக்கும் ஒருவரைப் போல உறுதியுடன் செயல்பட முடியும்.
அணி: உவமை அணி – மலைமேல் நின்று யானைப் போர் பார்ப்பதை ஒப்புமையாகக் கூறியுள்ளது.
9. குறள்: செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
பதில்: தம்மை வெறுக்கும் பகைவரின் பெருமை மற்றும் ஆடம்பரத்தை தகர்க்கும் மிகச் சிறந்த ஆயுதம், செல்வம் தான். எவ்வளவு கூர்மையான இரும்பு ஆயுதமும் அதை விடக் கணிசமானதல்ல.
10. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
பதில்: பொருள்: பகைவரின் தொழுது நிற்கும் கையின் உள்ளும், கொலைக்கருவி மறைந்து இருக்கும். அது போல் அவர் அழுத கண்ணீரின் உள்ளும் வஞ்சகம் மறைந்து இருக்கும் என்பதை உணர வேண்டும்.
**11. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.**
பதில்:ஒருவரிடம் அன்பு இல்லை, நல்ல நண்பர்கள் இல்லை, தன்னம்பிக்கை இல்லை என்றால், அவன் விரோதிகளை எதிர்கொள்வது எப்படி? அவரை ஒரு பலஹீனமான மனிதராகவே கருத வேண்டும்.
**12. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.**
பதில்: துனிவும் இல்லை, அறிவும் இல்லை, தன்னளவாக வாழும் சீரும் இல்லை, பிறர்க்கு உதவும் மனமும் இல்லாதவரால், அவன் பகைவருக்கு மிகவும் எளிதான ஒரு இலக்காக இருப்பான்.
13. ஆள்வினையும் ஆன்ற அறிவு மெனவிரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
பதில்: பொருள்: விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.
14. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.*
பொருள்: குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்.