Chapter 22
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்
1. மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை ஆகும்?
விடை: இ) இந்தியா – சீனா
2. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?
1. ஜி 20
2. ஏசியான் (ASEAN)
3. சார்க் (SAARC)
4. பிரிக்ஸ் (BRICS)
விடை: அ) 2 மட்டும்
3. ஒபெக் (OPEC) என்பது ……………….
விடை: இ) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு
4. இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?
விடை: அ) வங்காளதேசம்
5. பின்வருவனவற்றைப் பொருத்துக:
i) சல்மா அணை – 1. வங்காளதேசம்
ii) பராக்கா ஒப்பந்தம் – 2. நேபாளம்
iii) சுக்கா நீர்மின்சக்தி திட்டம் – 3. ஆப்கானிஸ்தான்
iv) சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் – 4. பூடான்
விடை: அ) 3 1 4 2
6. எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
விடை: இ) 7
7. எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?
விடை: ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு
8. எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?
விடை: ஈ) சிக்கிம்
9. எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
விடை: அ) ஐந்து
10. சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
விடை: ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு ……….. ஆகும்.
விடை: பூட்டான்
2. இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக ……….. இருக்கிறது.
விடை: மியான்மர்
3. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு ………………. ஆகும்.
விடை: நேபாளம்
4. இந்தியாவிற்குச் சொந்தமான …. ……… என்ற பகுதி மேற்கு வங்காளம் – வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது.
விடை: டீன்பிகா
5. இடிமின்ன ல் நிலம் என்று அறியப்படும் நாடு ………………. ஆகும்.
விடை: பூட்டான்
6. இந்தியாவும் இலங்கையும் ………………ஆல் பிரிக்கப்படுகின்றன.
விடை: பாக் ஜலசந்தி
III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
1. இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறையில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது?
1) சாலை
2) ரயில் வழி
3) கப்பல்
4) உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
விடை: ஆ) 1, 3 மற்றும் 4
2. கூற்று : இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International – Solar Alliance) தொடங்கியுள்ள ன.
காரணம் : இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.
விடை: அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
3. பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?
1. இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு, டாக்கா பல்கலைக்கழகத்தில் ‘தாகூர் இருக்கை’ ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.
2. மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயில் மியான்மர் ஆகும்.
3. நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுகளாகும்.
4. இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரர் நாடு இலங்கையாகும்.
அ) 1, 2 மற்றும் 3
ஆ) 2, 3 மற்றும் 4
இ) 1, 3 மற்றும் 4
ஈ) 1, 2 மற்றும் 4
விடை: இ 1, 3 மற்றும் 4
4. கூற்று : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒபெக் (OPEC) ஆர்வம் காட்டியுள்ளது.
காரணம் : தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை: இ கூற்று காரணம் இரண்டும் சரி
IV. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.
விடை: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்காளதேசம், மியான்மர், இலங்கை, மற்றும் மாலத்தீவு.
2. போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) பற்றிய சிறு குறிப்பு வரைக.
விடை: இந்தியா, ஆப்கானிஸ்தான் உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (Strategic Partnership Agreement) மூலம் வலிமை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்கவும், நிறுவனங்கள், வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதாக அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நல்கவும் வழிகோலுகிறது.
3. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா.
4. கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன ?
விடை: கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்காக சாலை – நதி – துறைமுகம் – சரக்கு போக்குவரத்து திட்டமான கலடன் பன்முக மாதிரி போக்குவரத்து திட்டத்தினை இந்தியா உருவாக்கி வருகிறது.
கொல்கத்தா நகரை ஹோசிமின் உடன் இணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு திட்ம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மண்டலத்தை உருவாக்க மியான்மர், கம்போடியா, வியட்நாம் வழியே பணிகள் நடைபெறுகிறது.
5. சபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
விடை: சபஹார் ஒப்பந்தம் என்பது முக்கூட்டு ஒப்பந்தம் ஆகும்.
இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து வழிதடங்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
6. இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகளாவிய குழுக்களைப் பட்டியலிடுக.
விடை: ஐ.பி.எஸ்.ஏ. (IBSA)
பிம்ஸ்டெக் (BIMSTEC)
பி.சி.ஐ.எம் (BCIM)
ஆர்.சி.இ.பி (RCEP)
எம்.ஜி.சி. (MGC)
ஈ.எ.எஸ் (EAS)
7. ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?
விடை: உற்பத்தித் துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா திட்டங்களில் பங்களிக்கிறது.
30,000 இந்திய மக்களுக்குப் பயிற்சி வழங்க ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
V. விரிவான விடையளிக்கவும்.
1. இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் குறித்தும் இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் எழுதுக.
விடை: பல்வேறு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினராக இந்தியா செயல்படுவதோடு அவற்றில் சிலவற்றின் நிறுவன உறுப்பினராகவும் இருந்து வருகிறது.
இந்தியா முறைப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளான ஐ.நா.சபை அணிசேரா இயக்கம், சார்க்க ஜி-20 மற்றும் காமன்வெல்த் போன்றவைகளில் உறுப்பினராக உள்ளது.
2. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.
விடை: பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாவதற்கான காரணம்:
உறுப்பு நாடுகளிடையே பெருளாதார வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவும், சொந்த மற்றும் சுயமாக நிரூபிக்கும் விதமாக இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
பிரிக்ஸின் நோக்கங்கள் :
பிராந்திய வளர்ச்சியை அடைவது.
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாக செயல்படுவது.
மனித மேம்பாட்டிற்கு மிகப் பரந்த அளவில் பங்களிப்பு செய்தல்.
அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்.
வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்ளுதல்.
உறுப்பு நாடுகளிடையே தகவல் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.
3. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக.
விடை: பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு:
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்) ஈராக்கில் பாக்தாத் நகரில் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும்.
இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் திட்டம்:
அதன் உறுப்பு நாடுகளுக்குள் எண்ணெய் கொள்கைகளை ஒருங்கிணைத்தல்.
எண்ணெய் சந்தையை நிலைநிறுத்த உதவுதல்.
எண்ணெய் நுகர்வு செய்யும் நாடுகளுக்குத் திறமையான, சிக்கனமான, வழக்கமான, விநியோகத்தை அளித்தல்.
பெட்ரோலியத் தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு மூலதனத்திற்கு நியாயமான வருவாய் கிடைக்கச் செய்தல்.
ஒபெக் எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்தல்
பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச மேம்பாட்டு நிதி (OPID) என்பது குறைந்த வட்டி வீதத்தில் கடன் அளிக்கும் நிதி நிறுவனம் ஆகும். – இது சமூக மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.
புத்தகங்கள், அறிக்கைகள், வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தை தொடர்பான மாநாட்டு நடவடிக்கைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ஒபெக் கொண்டுள்ளது.
மையம் பொது மக்களாலும் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.