Chapter 6


1. நாடு பிடிக்கும் கிழக்கிந்திய கம்பெனியின் நோக்கத்திற்கு முதல் எதிர்வினை யாரிடம் வெளிப்பட்டது?

விடை :  – பூலித்தேவர்.

2. ஒரு பகுதி அல்லது இராணுவ முகாம்/சிற்றரசை குறிக்கும் சொல்?

விடை :  – பாளையம்.

3. பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு குறிப்பிட்டனர்?

விடை :  – போலிகார் (Poligar).

4. இறையாண்மை கொண்ட பேரரசுக்குக் கப்பம் கட்டும் குறுநில அரசைக் குறிக்கும் தமிழ்ச்சொல்?

விடை : – பாளையம்.

5. காகதீய அரசில் பாளையக்காரர் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட அரசர்?

விடை :  – பிரதாபருத்ரன்.

6. 1529 இல் மதுரை நாயக்கராக பதவியேற்றவர்?

விடை :  – விஸ்வநாத நாயக்கர்.

7. விஸ்வநாத நாயக்கரின் அமைச்சருடன் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முறை?

விடை :  – பாளையக்காரர் முறை (அரியநாதர் உதவியோடு).

8. பாளையக்காரரின் காவல் கடமை?

விடை :  – படிக்காவல், அரசுக்காவல்.

9. மொத்த பாளையக்காரர்கள் எண்ணிக்கை?

விடை :  – 72.

10. கிழக்கில் இருந்த பாளையக்காரர்கள்?

விடை :  – சாத்தூர், நாகலாபுரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி.

11. மேற்கில் இருந்த பாளையக்காரர்கள்?

விடை :  – ஊத்துமலை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர்.

12. பூலித்தேவரின் புரட்சிக்காலம்?

விடை :  – 1755 – 1767.

13. ஆற்காட்டு நவாபின் சகோதரர்?

விடை :  – மாபூஸ்கான்.

14. மாபூஸ்கான் திருநெல்வேலிக்குச் சென்ற ஆண்டு?

விடை :  – 1755 மார்ச்.

15. மதுரை–திருநெல்வேலியில் நவாப் முகவர்களாக இருந்த மூவர்?

விடை :  – மியானா, முடிமையா, நபிகான் கட்டாக்.

16. பூலித்தேவரை ஆதரவளிக்காத பாளையக்காரர்கள்?

விடை :  – சிவகிரி, எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி.

17. ஆங்கிலேயருக்கு ஆதரவளித்த மன்னர்கள்?

விடை :  – புதுக்கோட்டை, இராமநாதபுரம்.

18. களக்காட்டுப் போரில் தோற்றவர்?

விடை :  – மாபூஸ்கான்.

19. மருதநாயகம் மதமாற்றத்திற்குப் பிறகு அழைக்கப்பட்ட பெயர்?

விடை :  – யூசுப்கான்.

20. பூலித்தேவரின் மூன்று கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற ஆண்டு?

விடை :  – 1761, மே 16.

21. யூசுப்கான் தூக்கிலிடப்பட்ட ஆண்டு?

விடை :  – 1764.

22. பூலித்தேவர் நெற்கட்டும்செவலை மீண்டும் கைப்பற்றிய ஆண்டு?

விடை :  – 1764.

23. பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு?

விடை :  – 1767 (கேப்டன் கேம்ப்பெல்).

24. பூலித்தேவரின் படைப் பிரிவுத் தலைவர்?

விடை :  – ஒண்டிவீரன்.

25. வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு?

விடை :  – 1730 (இறப்பு 1799).

26. வேலுநாச்சியாரின் திறமைகள்?

விடை :  – ஆங்கிலம், பிரெஞ்சு, உருது மொழிகள்; குதிரையேற்றம், வில்வித்தை.

27. சிவகங்கை மன்னர்?

விடை :  – முத்துவடுகநாதர்.

28. முத்துவடுகநாதரை மணந்த வேலுநாச்சியாரின் வயது?

விடை :  – 16.

29. வேலுநாச்சியாரின் கணவர்?

விடை :  – முத்துவடுகநாதர்.

30. வேலுநாச்சியாரின் மகள்?

விடை :  – வெள்ளச்சி நாச்சியார்.

31. 1772 காளையார்கோவில் போரின் விளைவு?

விடை :  – முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார்.

32. வேலுநாச்சியார் விருப்பாட்சியில் வாழ்ந்த ஆண்டுகள்?

விடை :  – 8 ஆண்டுகள்.

33. ஹைதர் அலியிடம் உதவி கோரியவர்?

விடை :  – தாண்டவராயனார்.

34. தளவாய் என்றால்?

விடை :  – இராணுவத் தலைவர்.

35. ஹைதர் அலியின் திண்டுக்கல் படைத்தலைவர்?

விடை :  – சையது.

36. திண்டுக்கல் கூட்டமைப்பில் பங்கேற்றவர்கள்?

விடை :  – லட்சுமி நாயக்கர், பூஜை நாயக்கர்.

37. கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு போராடியவர்?

விடை :  – கோபால நாயக்கர்.

38. சிவகங்கை மீட்பு யாரின் உதவியோடு?

விடை :  – ஹைதர் அலி, கோபால நாயக்கர்.

39. இந்தியாவில் பிரிட்டிஷை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர்?

விடை :  – வேலுநாச்சியார்.

40. வேலுநாச்சியாரின் தோழி?

விடை :  – குயிலி.

41. உடையாள் படையை வழிநடத்தியவர்?

விடை :  – குயிலி.

42. உளவு கூற மறுத்து கொல்லப்பட்ட பெண்?

விடை :  – உடையாள்.

43. 1780 ஆயுதக்கிடங்கைக் கொளுத்தியவர்?

விடை :  – குயிலி.

44. வீரபாண்டிய கட்டபொம்மன் கலகம்?

விடை :  – 1790 – 1799.

45. கட்டபொம்மன் தந்தை?

விடை :  – ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.

46. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரராக பொறுப்பேற்ற கட்டபொம்மன் வயது?

விடை :  – 30.

47. பாஞ்சாலங்குறிச்சி வரி வசூலுரிமை கம்பெனிக்கு சென்ற ஆண்டு?

விடை :  – 1781.

48. வரி வசூலில் நவாப்பிற்கு ஒதுக்கப்பட்ட பங்கு?

விடை :  – 1/6.

49. 1798 நிலுவை வரி தொகை?

விடை :  – 3310 பகோடா.

50. 1798 கட்டபொம்மனை அழைத்தவர்?

விடை :  – ஜாக்சன்.

51. ஜாக்சனை சந்தித்த நாள்?

விடை :  – 1798 செப்டம்பர் 19.

52. கட்டபொம்மன் எத்தனை மணிநேரம் நிற்க வைக்கப்பட்டார்?

விடை :  – 3 மணி.

53. ஜாக்சனை நீக்கிய ஆளுநர்?

விடை :  – எட்வர்ட் கிளைவ்.

54. கட்டபொம்மன் குழுவின் முன் ஆஜரான நாள்?

விடை :  – 1798 டிசம்பர் 15.

55. ஜாக்சனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டவர்?

விடை :  – எஸ்.ஆர். லூஷிங்டன்.

56. கட்டபொம்மன் செலுத்திய தொகை?

விடை :  – 1080 பகோடா.

57. 1799 வெல்லஸ்லி பிரபுவின் உத்தரவு?

விடை :  – படைகள் திருநெல்வேலி நோக்கிச் செல்ல.

58. சரணடைவு நிபந்தனை வழங்கிய நாள்?

விடை :  – 1799 செப்டம்பர் 1.

59. பானெர்மென் தூதனுப்பியவர்?

விடை :  – இராமலிங்கர்.

60. பானெர்மென் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்த நாள்?

விடை :  – 1799 செப்டம்பர் 5.

61. கட்டபொம்மன் செல்வாக்கு பயன்படுத்திய பாளையம்?

விடை :  – சிவகிரி.

62. சிவசுப்ரமணியனார் கைது செய்யப்பட்ட இடம்?

விடை :  – கள்ளர்பட்டி.

63. சிவசுப்ரமணியனார் தூக்கிலிடப்பட்ட நாள்?

விடை :  – செப்டம்பர் 13 (நாகலாபுரம்).

64. கட்டபொம்மனைத் துரோகம் செய்த மன்னர்கள்?

விடை :  – எட்டயபுரம், புதுக்கோட்டை.

65. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்?

விடை :  – கயத்தாறு.

66. மருது சகோதரர்கள்?

விடை :  – பெரிய மருது (1748–1801), சின்ன மருது (1753–1801).

67. வேலுநாச்சியாருக்கான அரசுரிமை மீட்பு எதில்?

விடை :  – காளையார்கோவில் போர்.

68. தென்னிந்திய கூட்டமைப்பை ஏற்படுத்தியவர்?

விடை :  – மருது பாண்டியர்.

69. மருது சகோதரர்களின் கலகம்?

விடை :  – 1800–1801.

70. இரண்டாவது பாளையக்காரர் போரில் பங்கேற்றவர்கள்?

விடை :  – மருது சகோதரர்கள், கோபால நாயக்கர், கேரள வர்மா, கிருஷ்ணப்பா, துண்டாஜி.

71. கட்டபொம்மன் சகோதரர்கள்?

விடை :  – ஊமைத்துரை, செவத்தையா.

72. சின்னமருது அழைத்துச் சென்ற இடம்?

விடை :  – சிறுவயல்.

73. திருச்சிராப்பள்ளி பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு?

விடை :  – 1801 ஜூன்.

74. அறிக்கை ஒட்டப்பட்ட இடங்கள்?

விடை :  – நவாப் கோட்டை, ஸ்ரீரங்கம் கோவில்.

75. சின்னமருது திரட்டிய படைகள்?

விடை :  – 20,000.

76. ஆங்கிலேயர்கள் தாக்கிய ஆண்டு?

விடை :  – மே 1801.

77. மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்?

விடை :  – 1801 அக்டோபர் 24 (திருப்பத்தூர் கோட்டை).

78. ஊமைத்துரை, செவத்தையா தலை துண்டிக்கப்பட்ட நாள்?

விடை :  – 1801 நவம்பர் 16.

79. மலேசியா நாடுகடத்தப்பட்டோர் எண்ணிக்கை?

விடை :  – 73.

80. மருது சகோதரர்களின் கலகப் பெயர்?

விடை :  – தென்னிந்தியப் புரட்சி.

81. கர்நாடக உடன்படிக்கை ஆண்டு?

விடை :  – 1801 ஜூலை 31.

82. தீரன் சின்னமலை பிறந்த ஆண்டு?

விடை :  – 1756.

83. வரி வசூல் செய்த திவான்?

விடை :  – முகம்மது அலி.

84. தீரன் சின்னமலை வாழ்நாள்?

விடை : – 1756–1805.

85. தீரனின் சிறப்பு?

விடை : – நவீன போர் முறை, சிலம்பு, வில்வித்தை.

86. தீரன் போராடிய இடம்?

விடை : – ஓடாநிலை.

87. வேலூர் புரட்சி ஆண்டு?

விடை : – 1806.

88. 1799 போருக்குப் பின் இணைக்கப்பட்ட பகுதி?

விடை : – கோயம்புத்தூர்.

89. கட்டபொம்மன் எதிர்ப்பு ஆண்டு?

விடை : – 1799.

90. மருது சகோதரர் எதிர்ப்பு ஆண்டு?

விடை : – 1801.

91. திப்புவின் மகன்கள் சிறை வைக்கப்பட்ட கோட்டை?

விடை : – வேலூர்.

92. புதிய இராணுவ விதிமுறை வெளியிட்டவர்?

விடை : – சர் ஜான் கிரடாக்.

93. புரட்சி வெடித்த நாள்?

விடை : – 1806 ஜூலை 10.

94. முதல் பலியானவர்?

விடை : – கர்னல் பேன்கோர்ட்.

95. கொல்லப்பட்ட கர்னல்?

விடை : – மீக்காரஸ்.

96. பிரிட்டிஷ் மன்னரின் படை அதிகாரிகள்?

விடை : – லெப்டினன்ட் எல்லி, பாப்ஹா.

97. ஆற்காட்டு குதிரைப்படைத் தளபதி?

விடை :  – கர்னல் ஜில்லஸ்பி.

98. ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தவர்?

விடை : – மேஜர் கூட்ஸ்.

99. ஜில்லஸ்பி கோட்டையை வந்தடைந்த நேரம்?

விடை : – காலை 9 மணி.

100. திப்புவின் மூத்த மகன்?

விடை : – பதே ஹைதர்.

101. கோட்டையில் பிணமான வீரர்கள் எண்ணிக்கை?

விடை : – 800.

102. விசாரணைக்காக சிறைபட்டோர் எண்ணிக்கை?

விடை : – 600.

103. திப்பு மகன்கள் அனுப்பப்பட்ட இடம்?

விடை : – கல்கத்தா.

104. ஜில்லஸ்பிக்கு அளிக்கப்பட்ட வெகுமதி?

விடை : – 7000 பகோடா.

105. பணிநீக்கம் செய்யப்பட்ட மூவர்?

விடை : – ஜான் கிரடாக், அக்னியூ, வில்லியம் பெண்டிங்.

106. வேலூர் புரட்சி எதிரொலித்த இடங்கள்?

விடை : – பெல்லாரி, வாலாஜாபாத், ஹைதராபாத், பெங்களூரு, நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம்.